Friday, July 19, 2013

வாலி ஒரு சில பதிவுகள்:

வாலி ஒரு சில பதிவுகள்:

ஸ்ரீரங்கத்தில் பிறந்து சென்னயில் வாழ்ந்த வாலி எழுத்தாளராக  வேண்டும் என்று  வேட்கை கொண்டு வாழவந்த ஒரு சகாப்தம்.


பின்பு கவிஞர் ஆனார்.  எதிலும் தோல்வி மூட்டை முடிசுகளை கட்டி கொண்டு புறப்படலாம் என்று என்னிய தருணத்தில்.

மயக்கமா , கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா
வந்த துன்பம் எதுவேன்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை
என்ற வரிகளை கேட்டு பேருந்து நிலையம் வறை சென்றவர்
மீண்டும் வீடு திரும்பினார்.

ஆகா கண்ணதாசன் என்ற ஒரு கவிஞன் வாலி என்ற ஒரு கவிஞனை தன் வரிகளால் ஏற்றி வைத்தார்...

அதன் ஒளி நம் உள்ளத்திலும் ,காதுகளிலும் தேனாய் பாய்ந்து வருகிறது பல தலைமுறையாய்.

அந்தநாள் நியாபகம் வந்ததே நண்பனே
முதல் முன்பே வா என் அன்பே வா வறை எத்தனை  எத்தனை
பாடல்கள்

நிலவிடம் வாடகை வாங்கி விழி விட்டினில் குடி வைக்கலாமா
என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியது எழுபத்து ஐந்து வயது முதியவர் என்றதும் சற்று அதிர்ந்தே போனேன்..

ஆம் வாலி என்ற வாலிபர் எழுதியா பாடல் தான் அது.பல வாலிபர்களின் காதலுக்கு கைகொடுத்தது...

உங்களுக்கு ஒன்று தெரியுமா வாலி எத்தனயோ அழைப்பு வந்தும்
இதுவறை அயல்நாடே சென்றது இல்லை..நியூயார்க் நகரம் பாடலை  எழுதியவர்..கப்பல் இறங்கிய காற்று கறையில் நடந்தது என்று எழுதிபிறகு ரகுமானிடம் ஐயோ நியூயார்க்கில் துறைமுகம் உள்ளதா என்று கேட்டு அறிந்தார்.

ஒரு முறை ரகுமான் அமெரிக்காவில் இருந்து நாளை வருகிறேன்
மாலை ஆறு மணிக்கு சந்திக்கலாமா என்று கேட்டார்..வாலி பழனி பாரதி என்ற இளம் கவிஞனை வர சொல்லிவிட்டேன் இறவு ஒன்பது மணிக்கு வா என்றார்.

பல லட்சம் தரும் ரகுமனுக்காக இளம் கவிஞனை அவர் அலச்சிய  படுத்தவில்லை..அன்று இறவு தொழுகையை ரகுமான் வாலியின்
விட்டில்தான் நடத்தினார்..

ஒரு அகோபி மடத்தினர் நூல் வெளியிட்டு விழாவில்..அப்பன் வெட்டிய கினறு என்பதுக்காக உப்பு தண்ணியை குடிப்பவன் நான் அல்ல என்று மிகவும் கம்பிரமாக உறையாற்றினார்.

இளையராஜா காத்திருப்பு அறையில் முமேத்தா நபிகள் நாயகம் பற்றி எழுதிய நூலை ராஜா கொடுத்தார். படிக்க எடுத்தவர் புத்தகத்தை கீழே  வைக்க முடிய வில்லை  ஒரே மூட்சாக படித்து முடித்தார்.

நாம் ஏன் ராமயணம் பற்றி இது போன்று எழுத கூடாது என்று உட னடியாக ராமாயண காவியம் எழுதி முடித்தார்..

கலைஞர் நூல் வெளிவந்த காலையே தொலை பேசிமுலம் தொடர்பு கொண்டு பாராட்டினர்..

உங்களுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று நினைத்தேன்! என்றார் வாலி

கலைஞர் கூறினார்

எனக்கு இராமாயணத்தில் வரும் வாலியும் பிடிக்கும்
வாலி எழுதிய ராமாயணம்மும் பிடிக்கும்.

அந்த காவியம் பிரபலம் ஆனது.

கண்ணதாசன் இறந்த போழுது வாலி சொன்னார்

மரணம் ஒரு எழுத படிக்க தெரியாத முட்டாள் ..அதனால் தான்
கண்ணதாசன் என்ற கவிதை புத்தகத்தை கிழித்துபோட்டுவிட்டது.

கோவத்தால் இன்று மாலை நெருப்பை ஏறிக்க செல்கிறார் வாலி..

நெருப்பும் நெருப்பும் சண்டையிடும்  பொழுது பெசன்ட் நகர் திக்கரை ஆகாமல் கண்ணீர்றால் நினைவது ஏன்...

தமிழ் சுட்டாலும் அன்பைதான் போழியுமோ ? வானம் அழுகிறது தன் அழகை பாடும் காதலன் இறந்துவிட்டான் என்று!

கடல் அலைகல் ஒன்றை ஒன்று பின்னுக்கு  தல்லி கடைசியாக முகம் பார்க்க வருகின்றன !

மேகம் படம் பிடிகிறது...

வாலி நி சென்று வா உன் நினைவுகள் என்று என்றும் உன் வரிகளால் உலா வரும்...

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே!

என்னவளே  அடி  என்னவளே  எந்தன்  இதயத்தை  தொலைத்து  விட்டேன் !

என்ன  விலையழகே  சொன்ன  விலைக்கு  வாங்க  வருவேன்
விலை  உயிரென்றாலும்  தருவேன் !

லேசா  லேசா  நீ  இல்லாமல்  வாழ்வது  லேசா !!

ராசாத்தி  உன்ன  காணாத  நெஞ்சு  காத்தாடி  போலாடுது!

நிலாவே  வா செல்லாதே வா
எந்நாளும்  உன்  பொன்வானம்  நான் !

மடை  திறந்து  தாவும்  நதி  அலை  நான்
மனம்  திறந்து  கூவும்  சிறு  குயில் நான்!

எல்லாப்புகழும்  ஒருவன்  ஒருவனுக்கே
நீ  நதி  போல  ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள்  வேர்வைக்குமே
உம்மை  உள்ளத்தில்  ஊ ர்  வைக்குமே !

இன்னும் எத்தனை எத்தனை !!

நன்றி!! நன்றி!! நன்றி !!

அ.ஜெயராஜ்குமார்